--> Skip to main content

Current Affairs - August 2013 (Updated)

ஜிசாட்-7 செயற்கைக்கோள் வெற்றி

இந்தியக் கடற்படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் மூலம், இந்திய நிலப்பகுதி தவிர, அதைச் சுற்றி அமைந்துள்ள கடல் பகுதியையும் எளிதில் கண்காணிக்க முடியும்.

தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள தளத்தில் இருந்து  ஐரோப்பிய விண்வெளி கூட்டமைப்பான ஏரியான் விண்வெளி நிறுவனத்தின் ஏரியான்-5 ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்பட்டது.

எஸ்.டி. பட்டியலில் நரிக் குறவர்கள் சேர்ப்பு


நரிக்குறவர்களை ST பட்டியலில் சேர்க்க இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இனி ....அரசியலமைப்புச் சட்டத்தின் 342 (1) மற்றும் (2) பிரிவுகளில் நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு சட்டத் திருத்த மசோதா தயாரிக்க வேண்டும். அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும். அதன்பிறகு பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகள், பலன்கள் நரிக்குறவர்களுக்குக் கிடைக்கும்.

நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத்தன்மை மசோதா-2012 (நிலம் கையகப்படுத்துதல் மசோதா)
முக்கிய சரத்துக்கள் :

பொது நோக்குக்காக (பப்ளிக் பர்பஸ்) நிலங்களைக் கையகப்படுத்தும்போது அதற்கான சந்தை மதிப்பில் நான்கு மடங்குத் தொகையை ஊரகப் பகுதியிலும், இரண்டு மடங்குத் தொகையை நகர்ப் பகுதியிலும் வழங்க வேண்டும்.

அரசும் தனியார் நிறுவனமும் இணைந்த திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களில் 80% பேரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும். தனியார் மட்டுமே செயல்படுத்தும் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் நில உரிமையாளர்கள் 70% பேரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு, தனது திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது முன்பு போலவே நில உரிமையாளர்களின் சம்மதம் தேவை இல்லை.

தந்தி சேவைக்கு மூடு விழா


2013  ஜூலை 14ஆம் தேதி இந்திய தந்திச் சேவை முடிவடைந்தது.

ரஷியாவைச் சேர்ந்த பௌல் ஷில்லிங் என்பவர் 1832-இல் மின் காந்த அலைகள் மூலம் செயல்படும் தந்தி சேவையைக் கண்டுபிடித்தார்.


அதையடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்.பி. சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837-இல் முழுமையான மின் தந்தி சேவையைக் கண்டுபிடித்தார். அவரது உதவியாளர் ஆல்ஃபிரெட் வெயில் "மோர்ஸ் கோட்' சிக்னலை கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பு மூலம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு உலகின் முதலாவது தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இக்கண்டுபிடிப்புதான் உலகில் இன்றளவும் கடைப்பிடிக்கப்படும் தந்தி சேவைக்கு அடித்தளமாக விளங்கியது.

1850ம் ஆண்டில் கொல்கத்தாவுக்கும் அதன் புறநகர் பகுதியில் உள்ள டைமண்ட் துறைமுகத்திற்கும் இடையே பரீட்சார்த்த முறையில் தந்தி சேவை தொடங்கப்பட்டது.

1854 ல் தந்தி சேவைக்கான தனித்துறை இந்தியாவில் உருவாக்கப்பட்டது.

தமிழில் தந்தி முறை கொண்டுவர காரணமானவர் - முன்னாள் எம்பி நல்லசிவம்


தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டம்

பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஆண்டுக்கு 60 ஆயிரம் வீடுகள் வீதம் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்ட இலக்கினை நிர்ணயித்துள்ளது. திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு 2011.

முல்லைப்பெரியாறு அணை தமிழகத்திற்கே சொந்தம்

முதல்முறையாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த உண்மையை ஒத்துக்கொண்டுள்ளது.
1886-இல் திருவாங்கூர் சமஸ்தானமும், மதராஸ் மாகாணமும் முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தம் செய்துகொண்டன.

தெலுங்கானா - புதுமாநிலம்
ஆந்திர பிரதேசம் தனி மாநிலமாக உருவான ஆண்டு - 1956

அடுத்த பத்தாண்டுகளுக்கு தெலுங்கானா மற்றும் ஆந்திரா இரு மாநிலங்களின் பொதுத் தலைநகராக ஹைதராபாத் இருக்கும்

சீமாந்திரா - வில் தெலுங்கானா மாநிலத்திற்கு  புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள மத்திய அரசு நிதி உதவி அளிக்கும்

"போலாவரம்' நீர்ப்பாசனத் திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.

இந்தியாவில் தனிமாநில கோரிக்கைகள் (மனப்பாடம் செய்துகொள்ளுங்கள் )

மேற்கு வங்காளத்தில்-கோர்க்காலாந்து,
உத்தரப் பிரதேசத்தில்-ஹரித் பிரதேஷ், பஸ்சிம் பிரதேஷ், புண்டல்கண்ட்
மகாராஷ்டிரத்தில்-விதர்பா
குஜராத்தில்-சௌராஷ்டிரா
கர்நாடகத்தில்-"கூர்க்'
ஒடிசாவில்-கோஷலாஞ்சல்
பிகாரில் மிதிலாஞ்சல்

அரசுத்துறைகளும் அந்நிய முதலீடும்

பாதுகாப்புத் துறைக்கான அன்னிய நேரடி முதலீட்டு தற்போது  26 சதவீதம்.

தொலைத்தொடர்புத்துறையில் அந்நிய முதலீடு வரம்பு அதிகரிப்பு

தொலைத்தொடர்புத்துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. முன்னர் இந்த வரம்பு 74 சதவீதமாக இருந்தது

கூரியர் சேவை துறையிலும் 100 சதவீத அன்னிய முதலீடுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாம்பால்.

அமெரிக்காவின் உளவுத் துறை ரகசியங்களை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள எட்வர்ட் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு  - ரஸ்யா

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்  இயற்றப்பட்ட ஆண்டு - 1951

தேசிய கொடி சம்பந்தமான சட்டங்கள்

தேச கெள்ரவத்துக்கு இழைக்கப்படும் அவமரியாதையை தடுப்பதற்கான சட்டம் - 1971
தேசியக் கொடி விதிமுறைகள் - 2002
இந்திய தேசிய சின்னங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான சட்டம் -2005

ஜிம்பாப்வே புதிய அதிபர் - ராபர்ட் முகாபே

சமீபத்தில் கடும் வெப்பம் காரணமாக நீர்நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளில்  ரேசன் முறையில் தண்ணீர் விடப்பட்ட ஆண்டு - சீனா

தமிழகத்தில் நகரத்தில் வசிக்கும் மக்கள் தொகை - 49 %

ஈரானின் 7-வது அதிபராக ஹசன் ரௌகானி தேர்வு செய்யப்பட்டார்



Internet.org - Every One of us, Enverywher, Connected

இது Facebook, Ericsson, Media Tek, Nokia, Opera, Qualcomm, Samsung ஆகிய ஏழு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும் திட்டம். இதன் மூலம் உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் மிகக்குறைந்த செலவில் இணைய இணைப்பு வழிவகைச் செய்யப்படும்.

இந்த திட்டத்தின் தலைவராக  Facebook ன் தலைவரான Mark Zuckerberg இருப்பார்.

அமெரிக்க ராணுவ ரகசியங்களை wikileaks இணைய தளத்தில் கசிய விட்ட ராணுவ வீரர் 'ப்ராட்லீ மானிங்' அமெரிக்க அரசால் 35 ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் சேவை தொடர்பான பொருட்கள் (service exports) - இந்தியாவின் மொத்த சேவை ஏற்றுமதியில் 16 %

மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம்

சமீபத்தில் மகாராஸ்டிரா  மாநில அரசு நாட்டிலேயே முதல் முறையாக மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் கொண்டு வர போராடி பூனேயில் சுட்டுக் கொல்லப்பட்டவர் - டாப்கோல்கர்.
இந்த சட்டம் 1995 ஆம் ஆண்டிலேயே மசோதாவாகக் கொண்டுவரப்பட்டது.

வங்கிகளும் வெளிநாட்டு முதலீடும் (FDI in Banking Sector)

இந்தியாவில் தற்போது  தனியார் வங்கிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நிய முதலீடு - 74 %
தேசியமயமாக்கப்பட்ட  வங்கிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நிய முதலீடு -  20%

காப்பீட்டுட்துறையில் அனுமதிக்கப்பட்ட அந்திய முதலீடு - 26%

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லைக்கோடு - Line of Actual Control (LAC)

இந்திய தேர்வாணையம் புது முயற்சி

தாங்கள் அளித்த ஓட்டு சரியான வேட்பாளருக்கு பதிவானதா என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வாக்களித்தபின் ஒரு ரசீது மாதிரியான print out கொடுக்கப்படும். அதில் வேட்பாளர் பெயர், சின்னம் போன்ற தகவல்கள் இருக்கும், ஆனால் வாக்காளர்கள் அந்த சீட்டை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இந்த முறைக்கு Voter Verifiable Paper Audit Trail (VVPAT) என்று பெயர்.

முதல் முறையாக வருகின்ற செப்டம்பர் மாதம் நாகாலாந்து      மாநிலத்தில் நடைபெறும் நோக்சின் சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் இம்முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

குறிப்பு : TNPSC, TNUSRB தேர்வுகளுக்கு பயன்படும் வரையில் இன்று முதல் தினமும்  Current Affairs செய்திகள் தொகுத்து வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்கு முந்தைய ஒருவருடத்திற்கான மொத்த Current Affairs குறிப்புகளும் வருகிற நாட்களில் தொகுத்து வழங்கப்படும். நன்றி !
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar